ப்ளாப்பி பேர்ட் விளையாட்டு மூலமாக ஆண்ட்ராய்டு வைரஸ்


மொபைல் விளையாட்டு சேவையான ஃப்ளாப்பி பேர்ட் சேவை அகற்றப்பட்டுள்ள நிலையில், அதன் போலி வடிவங்கள் பரவுவதால் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வைரஸ் ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரபல மொபைல் விளையாட்டான ஃப்ளாப்பி பேர்ட்டை இதுவரை ஆண்ட்ராய்டு மொபைல் பயனாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இந்த சேவையை அதன் உரிமையாளர் நிறுத்திக்கொண்டார். அதனால் போலி ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டுகள் உருவாகியுள்ளன. இந்த விளையாட்டின் மீதான மோகம் காரணமாக போலிகளையும் வாடிக்கையாளர்கள் டவுன்லோட் செய்கிறார்கள். அவற்றால் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மொபைல் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய போலி ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டுகளை டவுன்லோட் செய்வதன் மூலம் அவற்றால் வைரஸ்கள் பரவி, ஸ்மார்ட் போன்களில் இருந்து அடிக்கடி பயன்படுத்தப்படும் எண்களுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுவதாகவும், அதனால் தேவையற்ற பண விரயம் ஏற்படுவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும், உண்மையில் ஃப்ளாப்பி பேர்ட் விளையாட்டு சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், அதனால் போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஆய்வாளர்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment